15 நாட்களாக வழங்கப்படாத குடிநீர் : காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

 

15 நாட்களாக வழங்கப்படாத குடிநீர் : காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஜோதிபுரம் பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாகக் குடிநீர் வழங்கப் படாததால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

protest

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை காவல்துறையினர் பொது மக்களைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

protest

ஆனால், மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, காவல்துறையினர் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு நெடுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.