15 கேள்விகளுக்கும் சரியான பதில்…கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்!

 

15 கேள்விகளுக்கும் சரியான பதில்…கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்!

 ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராக  அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார். தற்போது முதன் முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராக  அவதாரம் எடுத்துள்ளார்.

ttn

இந்நிலையில்  கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா என்ற  வாய் பேசமுடியாத காது கேட்க முடியாத பெண் ஒருவர் பங்கேற்றுள்ளார்.  உடல் குறைகளை தாண்டி மனத்திடத்துடனும் நம்பிக்கையுடனும் விளையாடிய அப்பெண், 15 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்து  கோடீஸ்வரியில் 1 கோடி பரிசை வென்றுள்ளார். 

ttn

இதுகுறித்து கூறியுள்ள கௌசல்யா, கோடீஸ்வரியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே ஆசை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதையடுத்து கௌசல்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.