15வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாண்டா

 

15வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாண்டா

2008ம் ஆண்டில் தைவானுக்கு சீனா இரண்டு பாண்டா கரடிகளைப் பரிசளித்திருந்தது. அப்போது முதல் தைவானின்,தைபேவிலுள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா ஜோடியில், பெண் பாண்டாவுக்கு யுவான் யுவான் எனவும், ஆண் பாண்டாவுக்கு டுவான் டுவான் என பெயரிடப்பட்டு பராமரித்து வந்துள்ளனர்.

2008ம் ஆண்டில் தைவானுக்கு சீனா இரண்டு பாண்டா கரடிகளைப் பரிசளித்திருந்தது. அப்போது முதல் தைவானின்,தைபேவிலுள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா ஜோடியில், பெண் பாண்டாவுக்கு யுவான் யுவான் எனவும், ஆண் பாண்டாவுக்கு டுவான் டுவான் என பெயரிடப்பட்டு பராமரித்து வந்துள்ளனர்.

panda

தற்போது அந்த இரண்டு பாண்டாக்களுக்கும் தைவானில் 15வது பிறந்தநாளை தைபேவிலுள்ள உயிரியல் பூங்காவில் பொதுமக்களும், பூங்கா ஊழியர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். 
பாண்டா கரடிகளின் பிறந்தநாளையொட்டி ஐஸ்கட்டிகளால் செய்யப்பட்ட கேக் ஒன்றை பூங்கா நிர்வாகிகள் பாண்டாக்களுக்கு பரிசளித்திருந்தனர். பழங்கள், காய்கறிளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கேக்கில், ஐஸ் கட்டிகளால் ஆன பலூன் மற்றும் குட்டி பாண்டா உருவங்களும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.

panda

மேலும் கரும்பினால் 15 என குறிப்பிடப்பட்டிருந்தது. பாண்டா ஜோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.