பொள்ளாச்சி கொடூரம்! வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி!!

 

பொள்ளாச்சி கொடூரம்! வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி!!

பொள்ளாச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து பொள்ளாச்சியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்தில் கணவனை இழந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு 14 வயது மகள் உள்ளார். அடிக்கடி வீட்டுக்கு செல்லும் முத்துக்குமார் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி கொடூரம்! வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி!!

இதேபோல் நேற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.