நாமக்கல் மாவட்டத்தில் வ.உ.சி 149 ஆவது பிறந்த நாள் விழா
Sep 5, 2020, 17:20 IST1599306641000
நாமக்கல்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் 149 வது பிறந்த நாள் விழா, நாமக்கல் மாவட்டத்தில், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் நடைபெற்றது.
மோகனூர் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர், வஉசி திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பரமத்தி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வெள்ளாளர்கள் பேரவையின் சார்பில், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-அமுதினி