தனிமையில் இருந்தபோது தகராறு; ரத்தவெள்ளத்தில் சிறுமி – தூக்கில் தொங்கிய இளைஞர்

 

தனிமையில் இருந்தபோது தகராறு;  ரத்தவெள்ளத்தில் சிறுமி – தூக்கில் தொங்கிய இளைஞர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். பிழைப்புக்காக இவர் குடும்பத்துடன் தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வருகிறார். கோவிந்தனின் 16 வயது மகளை வேளச்சேரியை சேர்ந்த சதீஷ் காதலித்து வந்திருக்கிறார்.


இந்நிலையில் உறவினர் வீட்டு விசேசத்திற்காக குடும்பத்துடன் தொட்டியம் போயிருக்கிறார் கோவிந்தன். காதலியை தேடி சதீஷும் பைக்கிலேயே தொட்டியம் சென்றிருக்கிறார்.

தனிமையில் இருந்தபோது தகராறு;  ரத்தவெள்ளத்தில் சிறுமி – தூக்கில் தொங்கிய இளைஞர்


சிறுமிக்கு போன் செய்து ஊருக்கு வெளியே வர வைத்திருக்கிறார். பின்னர் இருவரும் பைக்கில் சுண்ணாம்பு ஓடைக்கு சென்று தனிமையில் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் சிறுமியின் கழுத்தை அறுவிட்டு பைக்கில் தப்பிச்சென்றுவிட்டான் சதீஷ்.

கழுத்தறுபட்ட சிறுமி சாலையோரம் வந்து விழுந்து கிடந்திருக்கிறார். அவ்வழியாக வந்தோர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை சின்ன சேலம் போலீசார் மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனயில் சேர்த்திருக்கிறார்கள்.

தனிமையில் இருந்தபோது தகராறு;  ரத்தவெள்ளத்தில் சிறுமி – தூக்கில் தொங்கிய இளைஞர்

இதற்கிடையில் பைக்கில் தப்பிய சதீஷ், சேலம் உடையார்பட்டி பைபாஸ் அருகே பெருமாள் மேடு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவன் சடலத்தை மீட்டுள்ளனர்.

சதீஷிடம் உடையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும், அக்கடிதத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி டார்ச்சர் கொடுத்ததால் காதலியின் கழுத்தறுத்தேன். போலீசில் சிக்கினால் போக்சோ சட்டத்தில் சிறைக்கு போக வேண்டியிருக்குமே என்று பயந்து நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன். வழியில் உடையார்பட்டியில் போலீஸ் அதிகமாக இருந்ததால் சாலையோரம் பதுங்கி இருந்தேன். பயம் அதிகமானதும் தற்கொலை முடிவு எடுப்பதாக குறிப்பிட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளனர் போலீசார்.