கண் திறந்து பார்த்த முருகன்: அதியசத்தை காண குவியும் பக்தர்கள்!

 

கண் திறந்து பார்த்த முருகன்: அதியசத்தை காண  குவியும் பக்தர்கள்!

முருகன் சாமி கண் திறந்த பார்த்ததால், தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருவதால் கோவை மாநகரம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

கோவை மாவட்டத்தில் மசகளிப்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வழக்கமான அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினமும் முருகன் சிலைக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

கண் திறந்து பார்த்த முருகன்: அதியசத்தை காண  குவியும் பக்தர்கள்!

இந்நிலையில் இன்று காலையில் கோயிலின் பூசாரி, கோயில் நடையை திறந்திருக்கிறார். அவர் முருகன் சிலையை பார்த்ததும் மெய்சிலிர்த்து நின்றுவிட்டார். கண் திறந்து பார்த்த கோலத்தில் முருகன் சிலை இருந்தது கண்டு அக்கம் பக்கத்தினரிடையே அவர் கூற, சுற்றுவட்டார பகுதியினர் கண் திறண்டு பார்க்கும் முருகனை பார்க்க குவிந்து வருகின்றார்கள்.