ரசிகர்களுக்காக எஸ்.பி.பி. சரண் அமைத்த தனி வழி!

 

ரசிகர்களுக்காக எஸ்.பி.பி. சரண் அமைத்த தனி வழி!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ரசிகர்களுக்காக எஸ்.பி.பி. சரண் அமைத்த தனி வழி!

கொரோனா தொற்று, சமூக இடைவெளி காரணங்களால் எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. அப்படி பங்கேற்க முடியாத பலரும், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த பால் ஊற்றும் சடங்கு மற்றும் 10ஆம் நாள் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்களுக்காக எஸ்.பி.பி. சரண் அமைத்த தனி வழி!

எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த விரும்பும் ரசிகர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், பண்ணை வீட்டில் எஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு போகும் வழியில் அவரத அரிய புகைப்படங்களை வைத்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண்.

மேலும், வெளியூரில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வருவதால் அவர்கள் எந்நேரமும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் தனி வழி ஒன்றையும் அமைத்திருக்கிறார். இதற்காக எஸ்.பி.பி. ரசிகர்கள் சரணுக்கு நன்றி தெரிவித்து செல்கிறார்கள்.