முதல்வரின் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்ற ஓபிஎஸ் மகன்

 

முதல்வரின் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்ற  ஓபிஎஸ் மகன்

அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி செலுத்துவதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று மாலை 6 மணிக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் வீட்டு வாசலில் நின்று முதல்வரை வரவேற்றார். அப்போது, முதல்வரின் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றார்.

இல்லத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் ஓபிஎஸ். வழிகாட்டுதல் குழுவினர் 11 பேரும் ஓபிஎஸ்சை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வரின் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்ற  ஓபிஎஸ் மகன்

முன்னதாக, கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினால் முதலமைச்சர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்திருந்தார் ரவீந்திரநாத்.

மேலும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஆக நியமிக்கப்பட்டுள்ள கழக முன்னோடிகள் 11 பேர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.