தடைபோட்ட ’ஜீ தமிழ்! ’ -விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா

 

தடைபோட்ட ’ஜீ தமிழ்! ’ -விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று கடைசிவரைக்கும் ஜீ தமிழ் டிவி கறாராக இருந்ததால், வேறு வழியின்றி வி.ஜெ.அர்ச்சரனா அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வெளியேறிவிட்டார். ஆனால், வைல்டு கார்டு ரவுண்டில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

தடைபோட்ட ’ஜீ தமிழ்! ’ -விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா

ஜீ தமிழ் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த வி.ஜெ.அர்ச்சனா, பிக்பாஸ் -4 சீசனில் பங்கேற்கப்போவதாக இருந்தார். ஒரு டிவியில் நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கும் போது இன்னொரு டிவி நிகழ்ச்சிக்கு போவதை எந்த டிவியும் பெருந்தன்மையாக அனுமதிப்பதில்லை. அதுபோலத்தான் ஜீ தமிழும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்பதற்கு ஆரம்பத்தில் இருந்து தடைபோட்டு வந்திருக்கிறது. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வந்திருக்கிறார் அர்ச்சனா.

தடைபோட்ட ’ஜீ தமிழ்! ’ -விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா

சென்னை பூந்தமல்லி அடுத்த ஈவிபி ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் அரங்கில் படப்பிடிப்பு நாளும் வந்தது. போட்டியாளர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் நிகழ்வு படமாக்கப்பட்டது. அப்போது அர்ச்சனாவை தேடி ஜீ தமிழ் டிவியில் இருந்து வக்கீல்கள் வர, பிக்பாஸ் அரங்கம் பரபரப்பானது. அர்ச்சனாவுடன் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் நடத்தப்பட்டதால் படப்பிடிப்பு 2 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

தடைபோட்ட ’ஜீ தமிழ்! ’ -விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா

அதன் பின்னரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், கடைசிவரைக்கும் ஜீ தமிழ் வக்கீல்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால், அர்ச்சனாவால் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லமுடியாமல் போய்விட்டது. இதனால் அவர் பிக்பாஸ் அரங்கை விட்டு வெளியேறினார்.

இந்த கசப்பான அனுபவத்தை மறக்க நினைத்த அர்ச்சனா, மறுநாள் குடும்பத்தினருடன் ஜாலி டூர் போயிருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், வைல்டு கார்டு ரவுண்டில் இன்னும் இரண்டு நபர்கள் பங்கேற்க விருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ஒருவரில் அர்ச்சனாவும் இருப்பார் என்று பிக்பாஸ் தரப்பு தெரிவித்திருப்பதாக தகவல்.