ஈரோடு: மனுநீதி திட்ட முகாமில் 145 பேருக்கு, ரூ.4.18 லட்சம் நிவாரணம்

 

ஈரோடு: மனுநீதி திட்ட முகாமில் 145 பேருக்கு, ரூ.4.18 லட்சம் நிவாரணம்

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற மனுநீதி திட்ட முகாமில் 145 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.,
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு: மனுநீதி திட்ட முகாமில் 145 பேருக்கு, ரூ.4.18 லட்சம் நிவாரணம்

இந்த முகாமில், பி.பெ.அக்ரஹாரம், பி.எஸ்.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, வீட்டு மனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு, முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 126 மனுக்களை அளித்தனர். முன்னதாக, இந்த முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கதிரவன் வழங்கினார்.