சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

 

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

என் படங்கள் வரலேன்னாலும் என்னைவிட்டு போகாம என் மேல உள்ள பாசத்தை குறைச்சுக்காக இருக்காங்க என் ரசிகர்கள். இது போதும் எனக்கு என்று நடிகர் சிம்பு அடிக்கடி கூறுவதை மெய்ப்பித்திருக்கிறார்கள் அவரது வேலூர் ரசிகர்கள்.

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

ஷூட்டிங்கிற்கு லேட்டாக வர்றார்னு கம்ப்ளையண்ட் இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்த சிம்பு, நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதையே குறைத்துக்கொண்டார். நயனுக்கு பிறகு ஹன்சிகாவுடன் காதல் என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்க, இது தொடர்பாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’ஹன்சிகா எனக்கு மறுமகளாக வந்தால் சந்தோசம்’’என்றார்.

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

டி.ராஜேந்தரின் இந்த பதில், ஹன்சிகா –சிம்புவின் காதலை உறுதிப்படுத்தியது. ஆனால் அது கல்யாணம் என்கிற நிகழ்வுக்கு நெருங்கவில்லை.

சிம்பின் தம்பி, தங்கைக்கு திருமணம் நடைபெற்றுவிட்ட நிலையில், சிம்பு இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்து பல விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவுக்கார பெண்ணை மணக்கிறார் சிம்பு என்று செய்திகள் வந்தன. ஆனால், இதை சிம்புவின் தந்தையும் தாயும் மறுத்தார்கள்.

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

’’எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

இந்நிலையில், வேலூரைச்சேர்ந்த சிம்புவின் ரசிகர்கள், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று ரத்தினகிரி முருகன் கோயிலில் பிரார்த்தனை செய்தனர். சிம்புவின் படத்தை கையில் ஏந்தியபடி மண்டியிட்டபடியே படிகள் ஏறிச்சென்று பிரார்த்தனை செய்தனர்.

சிம்பு கல்யாணத்துக்காக ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை!

பிரார்த்தனை முடித்துவிட்டு, கோயில் வளாகத்தில் இருந்தவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினர்.

கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் கல்யாணம் நடக்க வேண்டியும் பிரார்த்தனை செய்ததை அப்பகுதி்யினர் ஆச்சரியமாக பார்த்தனர்.