பிக்பாஸ் அரங்கில் ரகளை: வக்கீல்கள் உள்ளே வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்

 

பிக்பாஸ் அரங்கில் ரகளை: வக்கீல்கள் உள்ளே வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்

பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ், வக்கீல்கள் நுழைவது எல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆனால், முதல் நாள் படப்பிடிப்பிலேயே வக்கீல்கள் உள்ளே புகுந்து சர்ச்சை ஆனதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் நாளை முதல் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், பூந்தமல்லி அடுத்த நசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

பிக்பாஸ் அரங்கில் ரகளை: வக்கீல்கள் உள்ளே வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்

போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கமல்ஹான், ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் படப்பிடிப்பு இன்று நடந்தது.

அப்போது போட்டியாளர் வி.ஜெ.அர்ச்சணாவினால் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அர்ச்சணா விஜய் டிவி நிகழ்ச்சிக்கு திடீரென வந்ததால் , ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சட்ட நிபுணர்கள் பிக்பாஸ் அரங்கத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் வாசலில் வந்து, அரங்கத்திற்குள் செல்ல முற்பட்டபோது நடந்த வாக்குவாதம் கமல்ஹாசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அவரை அவசர அவசரமாக அரங்கத்தில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தி விட்டனர் பிக்பாஸ் டீம்.

பிக்பாஸ் அரங்கில் ரகளை: வக்கீல்கள் உள்ளே வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்

இதையடுத்து, போட்டியில் பங்கேற்கக்கூடாது என்று அர்ச்சணாவிடம் ஜீ தமிழ் சட்ட நிபுணர்கள்தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, படப்பிடிப்பை 2 மணி நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

பிரச்சனை முடிந்துவிட்டால் அர்ச்சணா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று தெரிகிறது.