நடிகையால் முதல் நாள் ஷீட்டிங்கிலேயே ரகளை! பிக்பாஸ் அரங்கில் இருந்து தெறித்து ஓடிய கமல்!

 

நடிகையால் முதல் நாள் ஷீட்டிங்கிலேயே ரகளை! பிக்பாஸ் அரங்கில் இருந்து தெறித்து ஓடிய கமல்!

பிக்பாஸ் -4 வது சீசன் நாளை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை முன்னிட்டு ஈவிபி ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஷிவானி, ரம்யா பாண்டியன், ரேகா நாயர், ஆரி, வி.ஜெ.அர்ச்சனா, பாடகர் வேல்முருகன், ராம், கேபரல்லா, சூப்பர் சிங்கர் அஜீஸ், அணுமோகன் உள்ளிட்ட பிக்பாஸ் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் படப்பிடிப்பு இன்று மாலை வரை நடந்துகொண்டிருந்தது.

இந்த அறிமுகப்படலம் முடிந்து ஒவ்வொரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றார்கள். வி.ஜெ.அர்ச்சணா பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றபோதுதான் யாரும் எதிர்பார்த்திராத சர்ச்சை எழுந்தது.

நடிகையால் முதல் நாள் ஷீட்டிங்கிலேயே ரகளை! பிக்பாஸ் அரங்கில் இருந்து தெறித்து ஓடிய கமல்!

வி.ஜெ.அர்ச்சணா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அவர் திடீரென விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ஜீ தமிழ் சட்ட நிபுணர்கள் பிக்பாஸ் அரங்கத்திற்கு நுழைந்து, அர்ச்சணாவை பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தனர்.

உள்ளே செல்வேன் என்று அர்ச்சணா பிடிவாதம் பிடிக்க, ‘’நீங்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் போட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் பணிகள் இருக்குது. திடீரென்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சட்ட சிக்கல் வரும்’’என்று அவர்கள் மல்லுக்கு நிற்க, அர்ச்சணாவுக்கும் அவர்களுக்கும் பெரிய தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனை எப்போது சரியாகுமோ என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சணா செல்வது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முன்னதாக, ஜீ தமிழ் சட்டநிபுணர்கள் அரங்கத்தின் உள்ளே வர நடந்த ரகளையை அறிந்த கமல்ஹாசன், அவர்கள் அரங்கத்தினுள் நுழைவதற்கு முன்பே அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்.