காரைக்காலில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு

 

காரைக்காலில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டுள்ள அரசு, பேருந்துகள் இயக்கப்படாது என்றும் கூறியுள்ளது.

காரைக்காலில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு

இதேபோல் காரைக்காலில் நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கை அமல்படுத்தி பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் நாளை அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.