14 வயதில் தாயான சிறுமி : விசாரணையில் வெளிவந்த உண்மை!

 

14 வயதில் தாயான சிறுமி : விசாரணையில் வெளிவந்த உண்மை!

அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஆண் குழந்தை பிறந்த சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே மடத்துபட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை கண்ட மருத்துவர்கள் சிறு பெண்ணாக இருப்பதால் வயது என கேட்டுள்ளனர். அதற்கு சிறுமி தனக்கு 14 வயது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

14 வயதில் தாயான சிறுமி : விசாரணையில் வெளிவந்த உண்மை!

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கும் அவரது உறவினர் சின்னராசுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் சின்னராசுவை சிறுமிக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 வயதில் தாயான சிறுமி : விசாரணையில் வெளிவந்த உண்மை!

இதை தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக சின்னராசுவை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.