14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே 14 வ‌ய‌து சிறுமிக்கு பாலிய‌ல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தன‌ர்..

திண்டுக்கல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் அருகே மேல்மலை கிராம‌மான‌ பூம்பாறை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (23) என்பவர் பாலிய‌ல் தொந்த‌ர‌வு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில் அவரது பாட்டி, யுவராஜை கண்டித்து உளளார்.

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

இத‌னால் ஆத்திரமடைந்த யுவராஜ், சிறுமி பாட்டியின் கையை க‌டித்துவிட்டு த‌ப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கொடைக்கானல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சைக்காக அனும‌தித்த‌னர். தொடர்ந்து, இந்த சம்வம் குறித்து மூதாட்டி, கொடைக்கான‌ல் காவ‌ல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், யுவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.