14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

 

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கெடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்னர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு அஞ்செட்டி அடுத்த பதிகவுண்டனூர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி கோட்டையன்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி கோட்டையன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

இதனை அறிந்த சிறுமியின் தாய், கேட்டபோது, அவருக்கு கோட்டையன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து அவர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் கோட்டையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.