14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவர்!

 

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவர்!

தஞ்சாவூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தஞ்சாவூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று பள்ளிக்கு வந்த மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி குமுதா கர்ப்பமக இருப்பதாக கூறியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மகளீர் போலீஸார் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணையும் நடத்தினர். விசாரணையில் தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்ற ஐடிஐ படிக்கும் மாணவன் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, இவ்வாறு நடந்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மாணவியின் புகாரின் பேரில் மாணவன் குமாரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.