14 மாதங்களாக அடிமைப்போல் வேலைப்பார்த்தேன் – குமாரசாமி கண்ணீர்

 

14 மாதங்களாக அடிமைப்போல் வேலைப்பார்த்தேன் – குமாரசாமி கண்ணீர்

கடந்த 14 மாதங்கள் காங்கிரஸுக்கு அடிமை போல் வேலை பார்த்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

14 மாதங்களாக அடிமைப்போல் வேலைப்பார்த்தேன் – குமாரசாமி கண்ணீர்

தனியார் செய்தி நிறுவனத்துக்கு குமாரசாமி அளித்த பேட்டியில், ஊராட்சித் தலைவர் முதல் சட்டமன்‌ற உறுப்பினர் வரை அனைவருக்கும் முழு சுதந்திரம் அளித்தும் தன் மீது குற்றம் சுமத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

கடந்த 14 மாதங்கள் காங்கிரஸுக்கு அடிமை போல் வேலை பார்த்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

தனியார் செய்தி நிறுவனத்துக்கு குமாரசாமி அளித்த பேட்டியில், ஊராட்சித் தலைவர் முதல் சட்டமன்‌ற உறுப்பினர் வரை அனைவருக்கும் முழு சுதந்திரம் அளித்தும் தன் மீது குற்றம் சுமத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். கடந்த 14‌ மாதங்கள் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்பட அனைவருக்கும் அடிமையாக போன்றே வேலை பார்த்ததாக அவர் வேதனையுடன் கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் தன்னை சந்தித்ததாகவும், அவர்களது தொகுதிகளின் வளர்ச்சிக்காக 19ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி‌யதாகவும் குமாரசாமி தெரிவித்தார். தனது முதுகில் எப்படிக் குத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் நன்கு தெரிந்து வைத்திருந்ததாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார்.