13 வயசு சிறுமி -13 வயசு சிறுவன் -குலாப் ஜாமூன் கொடுத்து நடந்த கொடுமை

 

13 வயசு சிறுமி -13 வயசு சிறுவன் -குலாப் ஜாமூன் கொடுத்து நடந்த கொடுமை

தனியே இருந்த 13 வயதான சிறுமியை அருகிலுள்ள இரு சிறுவர்கள் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

13 வயசு சிறுமி -13 வயசு சிறுவன் -குலாப் ஜாமூன் கொடுத்து நடந்த கொடுமை

ஆக்ராவின் ஷம்ஷாபாத் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஒரு 13 வயதான சிறுமி தனியாக இருந்தார் .அவரின் பெற்றோர் அருகில் உள்ள ஊரில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டனர் .அதை அந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் 13 வயதான சிறுவனும் ,22 வயதான வாலிபரும் தெரிந்து கொண்டனர் .அதனால் அந்த இருவரும் அந்த சிறுமியின் வீட்டினுள் நுழைந்தார்கள் .அதன் பிறகு அந்த சிறுமிக்கு குளோப் ஜாமூன் கொடுப்பதாக கூறி அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றனர் .

பின்னர் இருவரும் அவருக்கு குளோப் ஜாமுன் கொடுத்ததும் அதை அந்த சிறுமி சாப்பிட்டார் .அதன் பிறகு அந்த இருவரும் அந்த சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்தனர் .இதை அந்த சிறுமி தன்னுடைய  சகோதரரிடம் கூறினார் .அதன் பிறகு அந்த சகோதரர் அந்த இருவரையும் தேடி பார்த்தார் .அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் ,அவர்  அந்த சிறுமியை அழைத்து கொண்டு அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றார் .

அங்கு அந்த இரு  சிறுவர்களும் செய்த பலாத்கார விஷயத்தினை பொலிசில்  புகாராக கொடுத்தார் .பொலிசார் அவரின் புகாரின் அடிப்படையில் அந்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் .அதன் பிறகு அந்த 13 வயது சிறுவனை பிடித்து சிறார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் .மேலும் 22 வயதான வாலிபனை  சிறையில் அடைத்தார்கள் .அடுத்து அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்