’’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’’-வடிவேலு பாணியில் சீன் போட்டு சிறைக்கு சென்ற இளைஞர்

 

’’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’’-வடிவேலு பாணியில் சீன் போட்டு சிறைக்கு சென்ற இளைஞர்

நானும் ரவுடிதான் என்று நடிகர் வடிவேலு காமெடி பாணியில் சீன் போட்டு சிறைக்கு சென்றிருக்கிறார் இளைஞர் கார்த்தி.

நாகை மாவட்டம் கொடியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்தி என்பவர், வழக்கு விசாரணைக்காக வலிவலம் காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார்.

’’நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’’-வடிவேலு பாணியில் சீன் போட்டு சிறைக்கு சென்ற இளைஞர்

விசாரணை முடிந்து காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்பொழுது அங்கு காத்திருந்த அவரது நண்பர்கள் கார்த்திகை வீடியோ எடுத்து “நம்மள காப்பாத்திக்கிறதுக்கு பேரு ரெளடிசம்னா நாம ரெளடிசம் பண்ணுவோம்” என்ற அசுரன் சினிமா டயலாக்கை பதிவு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த நாகை மாவட்டம் வலிவலம் போலீசார், அவரை இன்று கைது செய்து “சிறப்பாக கவனித்து” சிறையில் அடைத்தனர்.


வழக்கு குறித்து போலீசாரின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்து விட்டு ஒழுங்காக வீட்டுக்குச் செல்லாமல் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என வடிவேலு பாணியில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு அலப்பறை செய்ததால், தற்போது சிறைக்கு சென்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த சீன் போட்ட ரவுடி கார்த்திக்.