திருவாசல் திடலில் ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

 

திருவாசல் திடலில்  ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாசல் திடலில் ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

காரைக்கால் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள திருவாசல் திடல் கிராமத்தில், வேளாண் பண்ணை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குளம் வெட்டினார்கள். அப்போது பூமிக்கு அடியில் இருந்து திடீரென ஒருவிதமான சத்தம் கேட்டது.

திருவாசல் திடலில்  ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

இதையடுத்து குளம் வெட்டுவதை நிறுத்திய தொழிலாளர்கள் சத்தம் வந்த பகுதியில் ஆழமாக கைகளால் தோண்டினர். அப்போது பூமிக்கு அடியில் இரண்டடி உயரமுள்ள இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிலைகளை வெளியே எடுத்து பார்த்த போது அது பழங்காலத்து வரதராஜ பெருமாள் மற்றும் காலிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலைகள் என தெரியவந்தது.

திருவாசல் திடலில்  ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

பின்னர், மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் காரைக்கால் வருவாய்துறை அதிகாரியிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இரு ஐம்பொன் சிலைகளும் காரைக்காலில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.