சென்னை தீவிபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அமைச்சர் பென்ஜமின் ஆறுதல்
Sep 23, 2020, 13:26 IST1600847803000
மதுரவாயிலில் தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று அமைச்சர் பென்ஜமின் ஆறுதல் கூறி, நிவாரணம் அளித்தார்.
சென்னை மதுரவாயில் 146 வது வட்டம் பாக்கியலஷ்மி நகர் பகுதியில் 3 குடிசை வீடுகள் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் தங்களின் அனைத்து உடமைகளையும் இழந்த குடும்பத்தினர்களுக்கு அமைச்சர் பெஞ்சமின் நேரில் சென்று தீ விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி, உடைகள் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகள், தீ விபத்தில் இழந்த சான்றிதழ்கள் அனைத்தையும் உடனடியாக தரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.