கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்

 

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்ட செய்தி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மல்லூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ்குமார் என்பவருக்கு, மருத்துவ பரிசோதனையில் கொரோ னா இருப்பது உறுதியானதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்
rights of the accused

சிகிச்சையில் இருந்து வந்த அந்த நரேஷ்குமார், இன்று அதிகாலை கொரோனா வார்டில் இருந்து தப்பித்து சென்றதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய கைதியை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.