மாணவியை ரெக்கார்டு நோட்டு எடுத்து வரச்சொல்லி..மயக்க ஸ்பிரே அடித்து… வேலூரில் கல்லூரி மேலாளர் கைது!

 

மாணவியை ரெக்கார்டு நோட்டு எடுத்து வரச்சொல்லி..மயக்க ஸ்பிரே அடித்து… வேலூரில் கல்லூரி மேலாளர் கைது!

வேலூர் கே.வி.குப்பம் பாலிடெக்னிக் கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி, டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்துள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அம்மாணவி வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். மாணவியை பரிசோதித்த மருத்துவர் அதிர்ந்தார். ‘’உங்க பொண்ணு 7 மாச கர்ப்பம்’’என்று மருத்துவர் சொன்னதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கொண்டு விசாரித்ததில் மாணவி ஏதும் சொல்லாததால், வேலூர் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் சொன்னார்கள். இதையத்து ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா, அம்மாணவியிடம் விசாரித்து, போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

மாணவியை ரெக்கார்டு நோட்டு எடுத்து வரச்சொல்லி..மயக்க ஸ்பிரே அடித்து… வேலூரில் கல்லூரி மேலாளர் கைது!

இந்த வழக்கில் போலீசார் கல்லூரி மேலாளர் பிரதாப்(25)பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து டி.எஸ்.பி. திருநாவுக்கரசுவிடம் நாம் கேட்டபோது, ‘’கடந்த மார்ச் மாதம், மாணவியின் தந்தைக்கு போன்செய்து, மாணவியை உடனே ரெக்கார்டு எடுத்து வரச்சொல்லி இருக்கிறார். மாணவியும் ரெக்கார்டு நோட்டு எடுத்துச்சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு ஆள் திடீரென மாணவி முன்னே வந்து மயக்க ஸ்பிரே அடித்திருக்கிறார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்திருக்கிறார். அவர் அருகில் சிரித்தபடியே பிரதாப் இருந்திருக்கிறார். இதை மாணவி வெளியே சொல்ல அச்சப்பட்டதால்தான் 7 மாத கர்ப்பமாகும் நிலை வந்திருக்கிறது. பிரதாப்பும் இத்தனை மாதம் கைதாகாமல் இருந்திருக்கிறார். பிரதாப்பினால் வேறு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரித்து வருகிறோம்’’என்கிறார்.