ஆபாச கதைகள் பேசிய ஆடியோ..காடுகளில் உலாவிய வீடியோ… : பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மதபோதகர் அசோக்தீபன்

 

ஆபாச கதைகள் பேசிய ஆடியோ..காடுகளில் உலாவிய வீடியோ… : பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மதபோதகர் அசோக்தீபன்

ஜெபிக்க வரும் பெண்களிடம் மதபோதகர் பேசும் ஆபாச ஆடியோவும், பெண்களுடன் காடுகளில் உலாவிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நீலகிரி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆபாச கதைகள் பேசிய ஆடியோ..காடுகளில் உலாவிய வீடியோ… : பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மதபோதகர் அசோக்தீபன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு முடியகம்பை பகுதியைச்சேர்ந்தவர் அசோக் தீபன்(58). இவர் அங்கிருக்கும் ‘பெதஸ்தா’ சபையில் மத போதகராக இருந்து வருகிறார். சபைக்கு ஜெபிக்க வரும் பெண்களிடம், தொட்டுத்தொட்டு பேசுவது அசோக்தீபனின் வழக்கும். தன் வலையில் விழ வைக்க அவர் வைத்திருக்கும் டெக்னிக்கின் முதல்படிதான் அது. தொடுதலில் எதிர்ப்பு தெரிவிக்காத பெண்களிடம் உரசிப்பேசுவதுதான் அடுத்த படி. இதிலும் எதிர்ப்பு தெரிவிக்காத பெண்களிடம், நேரிலும் போனிலும் மணிக்கணக்கில் ஆபாசமாக பேசி அவர்களை மயங்கவைத்துவிடுவதான் அசோக் தீபனின் மூன்றாவதுபடி. அடுத்தது, அப்பெண்களை நீலகிரி மலைக்காடுகளுக்கு அழைத்துச்செல்வதே கடைசி நிலை.

‘’நீ என் கனவுல வந்தாய், எப்படி இருந்தாய் தெரியுமா..என்ன செய்தாய் தெரியுமா..’’என்று நேரில் பேசும்போது அதில் மயங்கும் பெண்களிடம், போனில் வெளிப்படையாக ஆபாசமாக பேசுவதையே அன்றாட போதனையாக செய்து வந்திருக்கிறார் அசோக்தீபன்.

ஆபாச கதைகள் பேசிய ஆடியோ..காடுகளில் உலாவிய வீடியோ… : பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மதபோதகர் அசோக்தீபன்

தொடுதல், உரசலிலேயே நிறைய பெண்கள் எதிர்ப்பு காட்டியதால் அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. ஆபாச பேச்சில் மோகத்தின் உச்சத்திற்கு போவார்கள் என்ற நினைப்பில் அசோத்தீபன் பேச, சில பெண்கள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றதால் அசோக்தீபன் இப்போது சிறைக்குள் இருக்கிறார்.

அசோக் தீபனின் செயலால் அதிர்ச்சி அடைந்த சில பெண்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தன்னிடம் மடங்காத அப்பெண்களிடம் வீட்டிற்கே சென்று ரகளையில் ஈடுபட, அப்பெண்கள் நீலகிரி தர்ம அமைப்பு செயலாளர் ராமமூர்த்தியிடம் முறையிட்டிருக்கிறார்கள். அவர் மூலமாக கோத்தகிரி போலீசில் புகார் அளிக்க, போலீசார் அசோக்தீபனை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குன்னூர் சிறையில் சிறையில் அடைத்துள்ளனர்.