தீ பிடித்து எரிந்த துணிக்கடை பெயர்ப்பலகை

 

தீ பிடித்து எரிந்த துணிக்கடை பெயர்ப்பலகை

சென்னை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே துணிக்கடை பெயர் பலகை தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ பிடித்து எரிந்த துணிக்கடை பெயர்ப்பலகை

பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, அமைந்துள்ள துணிக்கடையில் மாடி மீது மின்விளக்குகளால் ஆன பிரமாண்ட பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு அந்த பெயர் பலகை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ பிடித்து எரிந்த துணிக்கடை பெயர்ப்பலகை

இதை அடுத்து கடை ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

தீ மள மளவென பரவி கடையில் மூன்றாவது தளத்தில் பற்றிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் வேகமான செயல்பட்டு தீயை அணைத்தனர்.

தீ பிடித்து எரிந்த துணிக்கடை பெயர்ப்பலகை

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ராட்சத பெயர்ப்பலகை எரிந்து நாசமானது. மூன்றாவது தளத்தில் ஒரு சில இடத்தில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள பூந்தமல்லி போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.