வடிவேல் காமெடி பாணியில் திருச்சியில் நடந்த திருட்டு

 

வடிவேல் காமெடி பாணியில் திருச்சியில் நடந்த திருட்டு

போலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க, கொள்ளையடித்த வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிடும் வடிவேல் காமெடி போலவே, திருச்சியிலும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது.

வடிவேல் காமெடி பாணியில் திருச்சியில் நடந்த திருட்டு

திருச்சி பாலக்கரையை அடுத்த கீழ படையாட்சி தெருவை சேர்ந்த மகாதேவன், அதே பகுதியில் எம்.ஆர் டிரேடர்ஸ் என்ற மளிகை மண்டியை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையை திறந்தபோது கடையின் சுவர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கடையின் பொருட்கள் சிதறி கிடந்ததுள்ளது. மேலும் கல்லாவில் முதல் நாள் விற்பனையான 25,000 ரூபாயை திருடர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

வடிவேல் காமெடி பாணியில் திருச்சியில் நடந்த திருட்டு

கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு அருகில் உள்ள குடோன் மாடிப்படியின் வழியாக உடைத்து கொள்ளையர்கள் கீழே இறங்கி சென்று விட்டனர் என்று தெரியவந்தது.

வடிவேல் காமெடி பாணியில் திருச்சியில் நடந்த திருட்டு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மகாதேவன் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.