கஞ்சா போதைக்கு அடிமையான மாணவ, மாணவிகள்! மீட்கும் நடவடிக்கையில் திருச்சி போலீசார்!

 

கஞ்சா போதைக்கு அடிமையான மாணவ, மாணவிகள்! மீட்கும் நடவடிக்கையில் திருச்சி போலீசார்!

கஞ்சா பயன்படுத்திய இளைஞர்கள் கைது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா பறிமுதல் என்பன போன்ற செய்திகள் திருச்சி பகுதியில் வழக்கமான ஒன்றாகி விட்டது.

கஞ்சா போதைக்கு அடிமையான மாணவ, மாணவிகள்! மீட்கும் நடவடிக்கையில் திருச்சி போலீசார்!

வரகனேரி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தாராநல்லூரை சேர்ந்த மணி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா போதைக்கு அடிமையான மாணவ, மாணவிகள்! மீட்கும் நடவடிக்கையில் திருச்சி போலீசார்!

திருச்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவ, மாணவிகளை அதிலிருந்து மீட்கும் வகையில் மாநகர காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக திருச்சி மாநகரத்தில் வரகனேரி,தாராநல்லூர்,காந்தி மார்க்கெட் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதை கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.