சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டிக் கொலை – தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

 

சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டிக் கொலை – தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொத்து தகராறு காரணமாக , பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாசம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இவரது மனைவி லீலாவதி மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களிடம் சொத்து தகராறு காரணமாக உறவினர் முருகன் என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்த பின்னர் லீலாவதி தனியாக வசித்து வந்ததுடன், சத்திரப்பட்டியில் ஒரு பஞ்சாலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டிக் கொலை – தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

இந்த நிலையில், நேற்றிரவு இரவு ஷிப்ட் வேலைக்கு சென்று கொண்டிருக்கையில், மில் அருகில் லீலாவதியை வழிமறித்த முருகன் அவரை அரிவாளால் வெட்டி , கீழே சாய்த்துவிட்டு தப்பியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த லீலாவதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழராஜகுலராமன் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி ஓடிய முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.