தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு! கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!

 

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு! கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!

தேசிய கல்விக்கொள்கையை திரும்பெற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குலக்கல்வியை அனுமதிக்கமாட்டோம், மாநில அரசின் உரிமைகளை பறிக்க அனுமதிக்கமாட்டோம், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையை
நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டடோர் கூட்டியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தேசிய
கல்விக்கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கத்தின் சார்பில் தேசிய கல்விக்கொள்கையை திரும்பெற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு! கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!

கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை வெளிப்படுத்தியும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.