”புதிய ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவிக்கள்” அறிமுகப்படுத்த ரெட்மி திட்டம்

 

”புதிய ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவிக்கள்” அறிமுகப்படுத்த ரெட்மி திட்டம்

ரெட்மி நிறுவனம் விரைவில் ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவி ரகங்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும், ரெட்மி, ஏ சிரீஸ் என்ற ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவை 32, 43, 50, 55 மற்றும் 65 ஆகிய திரை அளவுகளில் வெளிவர உள்ளது. இதில் 32 இன்ச் டிவியானது ஃபுல் எச்டி திரையாகவும், 50 மற்றும் அதற்கு மேற்பட்ட திரை கொண்ட டிவிக்கள் 4கே டிவியாகவும், 43 இன்ச் டிவி ஃபுல் எச்டி அல்லது 4 கே என வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”புதிய ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவிக்கள்” அறிமுகப்படுத்த ரெட்மி திட்டம்

ஏற்கனவே ஸ்மார்ட் டிவி எக்ஸ்50, எக்ஸ்55 மற்றும் எக்ஸ்65 ஆகிய டிவிக்களை ரெட்மி பிராண்டில் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. எனினும் இந்த டிவிக்கள் இதுவரை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளிவர உள்ள ஏ சிரீஸ் ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல நிறுவனங்களும் பொருட்களை அறிமுகப்படுத்தும் என்பதால் இந்தியாவில் ஸ்மார்ட் டிவிக்களை ரெட் மி விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.