கட்டிலுக்கு கீழே ஒளிந்துகொண்ட திருடன்! காட்டிக்கொடுத்த குறட்டை!

 

கட்டிலுக்கு கீழே ஒளிந்துகொண்ட திருடன்! காட்டிக்கொடுத்த குறட்டை!

பைனான்ஸியர் தூங்கியதும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவரின் கட்டிலுக்கு கீழே போய் படுத்துக்கொண்ட திருடனுக்கு, பைனான்சியர் பணத்தை எண்ணி முடித்துவிட்டு தூங்க நேரம் ஆனதால், அசதியில் தூங்கிவிட்டான். குறட்டை சத்தம் கேட்டு பைனாஸ்சியர் அறையை பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டார்.

ஆந்திராவில் லக்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி. பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் தினமும் இரவில் பணத்தை எண்ணி வைப்பது வழக்கம். இதை நோட்டமிட்ட திருடன், பைனான்சியரின் வீட்டிற்குள் நுழைந்து, அவர் அசந்த நேரம் பார்த்து அவரின் படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்கு கீழே போய் படுத்துக்கொண்டான். பைனான்சியர் தூங்கியதும் பணத்தை கொள்ளையடிப்பதுதான் திட்டம்.

கட்டிலுக்கு கீழே ஒளிந்துகொண்ட திருடன்! காட்டிக்கொடுத்த குறட்டை!

கட்டிலுக்கு மேலே உட்கார்ந்து பணத்தை எண்ணுகிறார்..எண்ணுகிறார்.. ரொம்ப நேரமாக. எல்லாம் பணமும் தனக்குத்தான் வந்து சேரப்போகிறது என்ற நினைப்பில் கட்டிலுக்கு கீழே உட்கார்ந்து கணக்கு போட்டுக்கொண்டிருந்தான் திருடன்.

கணக்குவழக்குகளை சரிபார்த்து, பணத்தை எண்ணி வைக்க பைனான்சியருக்கு நெடுநேரமானதால், திருடன் அசதியில் தூங்கிவிட்டான். திடீரென்று கட்டிலுக்கு கீழே இருந்து குறட்டை சத்த வந்ததை கேட்ட பைனாச்சியருக்கு அதிர்ச்சி. பின்னர் மெல்ல கட்டிலை விட்டு இறங்கி நடந்து அறைக்கு வெளியே போய் அறையை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, போலீசுக்கு தகவல் தந்துவிட்டார்.

போலீஸ் வந்து கட்டிலுக்கு கீழே தூங்கிக்கொண்டிருந்த திருடனை எழுப்பியதும், திருதிருவென்று முழித்த திருடன், இப்போது சிறையில் தூங்கிக்கொண்டிருக்கிறான்.