திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயில் திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு

 

திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயில் திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோயிலில் மஹாள அமாவைசையை முன்னிட்டு நடைபெறும் தரிசனத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும், திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதித்திருப்பாதக கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயில் திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகப் பெருமாள் கோயிலுக்கு மஹாளய அமாவாசை தினத்தன்று திருவள்ளூர் மட்டுமல்லாது வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற இந்த திருக்கோயிலுக்கு வருவது வழக்கம்.

திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயில் திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு

இந்நிலையில் மஹாளய அமாவாசை மிகவும் உகந்த தினம் என்பதால் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கவும், தமழக அரசின் ஆணைக்கிணங்க நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும், பொது மக்களின் நன்மை கருதி யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் கோயில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.