13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோவில் கைது…

 

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோவில் கைது…

ஈரோடு

பெருந்துறையில் மகள் முறையிலான 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணமான நிலையில், அவர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து, அவர் கௌசல்யா என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கௌசல்யாவின் தங்கையான சுந்தரி என்பவருக்கு, சதீஷ் என்பவருடன் திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 2008ஆம் கணவர் உயிரிழந்த நிலையில் சுந்தரி, கௌசல்யா வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனால் முருகேசனுக்கும், சுந்தரிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோவில் கைது…

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது சுந்தரியின் 13 வயது மகளை, முருகேசன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக கூறி பல முறை அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாறுதலை கண்டு சுந்தரி விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை அடுத்து, சுந்தரி இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,முருகேசனை கைதுசெய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.