“கான்ஸ்டபிள் வருவார் ,கண்ட இடத்தில் தொடுவார்” -காவல் நிலையத்தில் கற்பமாக்கப்பட்ட சிறுமி கதறல்

 

“கான்ஸ்டபிள் வருவார் ,கண்ட இடத்தில்  தொடுவார்” -காவல் நிலையத்தில் கற்பமாக்கப்பட்ட சிறுமி கதறல்

சிறுமிகள் காப்பகத்திலிருந்து தப்பிய சிறுமியை ஒரு தலைமை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு பலரை அதிச்சியடைய செய்துள்ளது

“கான்ஸ்டபிள் வருவார் ,கண்ட இடத்தில்  தொடுவார்” -காவல் நிலையத்தில் கற்பமாக்கப்பட்ட சிறுமி கதறல்

ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள 13 வயது சிறுமியை அவரின் தாயார் தன்னால் சிறுமியை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறி அங்குள்ள சிறுமிகள் காப்பகத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.ஜூலை மாதம் அந்த சிறுமி அங்கு சேர்க்கப்பட்ட பிறகு அவரால் அங்கு இருக்க முடியவில்லை .ஏனெனில் அங்கு அவருக்கான பல வசதிகள் இல்லை .அங்கு குளிக்க ,சாப்பிட தனி ரூமில்லாததால் வசதியாக வளர்ந்த அந்த சிறுமியால் அந்த காப்பகத்தில் இருக்கமுடியாமல் அங்கிருந்து தப்பியோடினார் .
பிறகு அவரை பற்றி போலீசில் அந்த காப்பகத்தார் புகார் அளித்தார்கள் .பின்னர் போலீசார் அந்த சிறுமியை வலைவீசி தேடி அவரை அந்த காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள் .ஆனால் அதற்கு பிறகு விசாரணை என்ற பெயரில் அந்த சிறுமியை அந்த காப்பகத்திலிருந்த ஒரு தலைமை காவலர் அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் .அதன் பிறகு அவரை அங்கேயே லாக்கப்பில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் சிலர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது .இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார் .அதை கேட்டு அதிர்ச்ச்சியடைந்த அந்த போலீஸ் அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளார் .இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் இப்போது புயலை கிளப்பியுள்ளது .இந்த சம்பவம் பற்றி மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

“கான்ஸ்டபிள் வருவார் ,கண்ட இடத்தில்  தொடுவார்” -காவல் நிலையத்தில் கற்பமாக்கப்பட்ட சிறுமி கதறல்