13 வயது பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

 

13 வயது பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் 13 வயது பெண் குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 16 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 வயது பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

13 வயது பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

அடுத்த நாள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 17 ஆம் தேதி இரவு அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அச்சிறுமியின் இறப்பிற்கு கொரோனா தொற்றால் ஏற்பட்ட கடும் நுரையீரல் அலர்ஜியே காரணம் என சொல்லப்படுகிறது.