தந்தையுடன் வசித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – உறவினர் கைது!

 

தந்தையுடன் வசித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – உறவினர் கைது!

கோயம்புத்தூர்

கோவையில் தந்தையுடன் வசித்த பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழும் நிலையில், சிறுமி தாய் – தந்தையுடன் மாறி மாறி தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தந்தை வீட்டுக்கு சென்றிருந்தார்.

தந்தையுடன் வசித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – உறவினர் கைது!

அப்போது, உணவு கொடுப்பதற்காக அவர்களது வீட்டின் அருகே உள்ள அத்தை வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் மாமா பேச்சிமுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்த மகளின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து அவரது தயார் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதுகுறித்து, சிறுமியிடம் விசாரித்தபோது மாமா பேச்சிமுத்து பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிறுமியின் தாயார் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பேச்சிமுத்துவை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.