13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : பாஜக நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது !

 

13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : பாஜக நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது !

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 13 வயது மகளை , தனது அக்கா மகளும் அவரது கணவரும் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : பாஜக நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது !

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சிக்னலில் பேனா, பென்சில் போன்ற பொருட்களை விற்று தனது தாயை காப்பாற்றி வந்துள்ளார். அப்போது சிறுமியின் பெரியம்மா மகள் ஷாகிதா பானு என்பவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இரண்டு மாதங்களாகியும் அந்த சிறுமியை வீட்டிற்கு கொண்டு வந்து விடாததால் சிறுமியின் தாய் ஷாகிதா பானுவிடம் சண்டை போட்டு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் செயல்களில் மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தியதில் அக்காவானஷாகிதா பானுவும் அவர் கணவரான மதன்குமாரும் சேர்ந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : பாஜக நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது !

இந்த விவகாரத்தில் ஷாகிதா பானு, அவரது கணவர் மதன்குமார், மதன்குமார் தங்கை சந்தியா , சந்தியாவின் நண்பர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதைதொடர்ந்து ஷாகிதா பானு, மதன்குமார் ,சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா ,கார்த்தி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தில் ,மதுபோதையில் காவலர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதனால் விசாரணையில் இறங்கிய போலீசார்,காசிமேடு பகுதியை சேர்ந்த பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தியையும் கைது செய்தனர்.

13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : பாஜக நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் கைது !

நெருங்கிய நண்பர்களான ராஜேந்திரனும் புகழேந்தியும் 13 வயது சிறுமியை மது போதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது . அத்துடன் இவர்களுடன் சென்ட்ரல் ரயில் நிலைய ஊழியர் காமேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . மொத்தம் இந்த விவகாரத்தில் 11 பேர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார். அத்துடன் அவர் காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.