லாக் டவுனில் சிக்கி,லாக்கப்பில் சின்னாபின்னமான 13 வயது சிறுமி-பொறுப்பு போலீசின் பொறுப்பில்லாத செயல்..

 

லாக் டவுனில் சிக்கி,லாக்கப்பில் சின்னாபின்னமான 13 வயது சிறுமி-பொறுப்பு போலீசின் பொறுப்பில்லாத செயல்..

புவனேஸ்வரில் பிரமித்திரப்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் மஜீ .இவர் மார்ச் மாதம் கொரானாவால் ஊரடங்கு அமல் படுத்திய நேரத்தில் ஊருக்கு போக முடியாமல் சிக்கி தவித்த ஒரு 13 வயது பழங்குடியின சிறுமியை போலீஸ் வண்டியில் கூட்டிக்கொண்டு போய் காவல் நிலையத்தில் வைத்தே பல வாரங்களாக ஆறு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

லாக் டவுனில் சிக்கி,லாக்கப்பில் சின்னாபின்னமான 13 வயது சிறுமி-பொறுப்பு போலீசின் பொறுப்பில்லாத செயல்..இந்த பலாத்காரத்தால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு அரசு மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்துக்கு வந்து கருக்கலைப்பு நடத்திய கொடுமையும் நடந்துள்ளது .
அந்த சிறுமி ஒரு நாள் காவல்நிலையத்தின் வாசலில் அழுதுகொண்டிருந்தபோது உள்ளூர் வாசி ஒருவர் விசாரித்த போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் ,அந்த சிறுமியை போலீஸ் அதிகாரி அவரின் கிராமத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துள்ளார் .
இப்போது இந்த விஷயம் புவனேஸ்வரில் பூதாகரமாய் வெடித்துள்ளது .இந்த விவகாரத்தால் கொதித்துப்போன டிஜிபி உடனடியாக அந்த இன்ஸ்பெக்டரை பதவி நீக்கம் செய்துள்ளார் .இப்போது அவரையும் சேர்த்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆறுபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .