அரியலூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

 

அரியலூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

அரியலூர்

அரியலூர் அருகே குட்டையில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அடுத்த கீரங்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது விஷாலி (13). இவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பிள்ளையார்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வெள்ளிக்கிழமை அன்று விஷாலி, அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன். அங்குள்ள பனங்குட்டைக்கு சென்று குளித்து கொண்டிருந்தார்.

அரியலூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு!

அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட விஷாலி நீரில் மூழ்கினார். இதனை கண்டு அந்த பகுதி இளைஞர்கள் குட்டையில் இறங்கி தேடினர். சுமார் அரை மணிநேர தேடுதலுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு விஷாலியை பரிசோதித்த மருத்தவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்த த.பழூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றர்.