பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!

 

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் நிஷா தர்ஷினி (13). இவர் ஆத்தூரில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த நிஷா தர்ஷினி, சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்திருந்தார்.

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிஷா தர்ஷினி, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பின் அவர்கள், சிறுமியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இதனையடுத்து, பெரம்பலூர் தாலுகா போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.