கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் தஞ்சையில் பலி!

 

கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் தஞ்சையில் பலி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் தஞ்சையில் பலி!

இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் தசை இணைப்பு திசு சிதைவு நோயால் புதுக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது இந்த சிறுவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறுவன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிறுவனுக்கு மிகவும் மோசமான நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணமாக சிறுவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் தஞ்சையில் பலி!

ஏற்கனவே வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சாவூருக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தஞ்சையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவரை 396 பேர் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 169 பேர் குணமடைந்து இழப்பு ஒன்றும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.