போலீசார் மீது தாக்குதல் நடத்திய 13 சாராய வியாபாரிகள் கைது!

 

போலீசார் மீது தாக்குதல் நடத்திய 13 சாராய வியாபாரிகள் கைது!

அணைக்கட்டு அருகே விழுப்புணர்வு ஏற்படுத்த சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அதிகளவில் சாராயம் காயச்சப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு போலீசார் சென்ற போது காவலர்களை மிரட்ட, சாராயம் காய்ச்சுபவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஈடுபட்ட, அன்பு மற்றும் விஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கடந்த மாதம் 29 ஆம் தேதி அல்லேரி மலையில் விழுப்புணர்வு ஏற்படுத்த சென்ற 2 போலீசாரை, சரமாரியாக சாராயவியாபாரிகள் தாக்கினார்.இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

போலீசார் மீது தாக்குதல் நடத்திய 13 சாராய வியாபாரிகள் கைது!

இதனைத்தொடர்ந்து போலீசாரை தாக்கிய துரைசாமி மற்றும் கணேசன் ஆகியோர் தானாக வந்து சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலீசாரை தாக்கியது யார் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், போலீசாரை தாக்கிய மேலும் 13 சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.