மகாராஷ்ட்ரா கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு

 

மகாராஷ்ட்ரா கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மஹாத் நகரில் உள்ள 5 தளங்கள் கொண்ட கட்டடத்தில் 3 தளங்கள் முற்றிலுமாக இடிந்தது. இந்நிலையில் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 200க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக அமைச்சர் அதிதி எஸ். தாத்கரே தெரிவித்துள்ளார். இதனிடையே மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்ட்ரா கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு

இந்நிலையில் ராய்காட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இடிந்துவிழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் அளிக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.