8ம் வகுப்பு மாணவி 5 மாச கர்ப்பம்: அடிக்கடி கடைக்குள் அழைத்துச்சென்ற பெரியப்பா கைது

 

8ம் வகுப்பு மாணவி 5 மாச கர்ப்பம்: அடிக்கடி கடைக்குள் அழைத்துச்சென்ற பெரியப்பா கைது

தாய் , தந்தையை இழந்த 13 வயது சிறுமி சென்னை வேப்பேரியில் சித்தி வீட்டில் தங்கிருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார். திடீரென சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் சித்தி.

8ம் வகுப்பு மாணவி 5 மாச கர்ப்பம்: அடிக்கடி கடைக்குள் அழைத்துச்சென்ற பெரியப்பா கைது

மருத்துவ பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தி, சிறுமியிடம் விசாரித்தபோது அவர் எதுவும் சொல்லாமல் அழுதிருக்கிறார்.

இதையடுத்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சித்தி. மகளிர் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் என்பவர் தனக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை சொல்லி இருக்கிறார்.

ஓட்டேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், தனது கடைக்கு சிறுமியை மிரட்டி அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படி கடந்த ஒரு வருடமாக செய்து வந்திருக்கிறார்.

இதையத்து விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்