நாகப்பட்டினம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 2 சிறுவர்கள் போக்சோவில் கைது

 

நாகப்பட்டினம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 2 சிறுவர்கள் போக்சோவில் கைது

நாகை அருகே வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். நாகை மாவட்டம் பாலையூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தனியாக தூங்கியுள்ளார்.

நாகப்பட்டினம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 2 சிறுவர்கள் போக்சோவில் கைது

அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்த நிலையில், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து தஞ்சை இளம் சிறார் விடுதிக்கு அனுப்பினர்.