13 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை: போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

 

13 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை: போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

13 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் : 13 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் தினேஷ்குமார் கடந்த 22ம் தேதி கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். சிறுமியின் தாயின் கண்ணெதிரே நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்துவிட்டு தனது தம்பி மற்றும் மனைவியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த தினேஷ்குமார் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறுமியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தினேஷ்குமாரை, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தினேஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.