13 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் – அனுஷ்கா

 

13 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் – அனுஷ்கா

ரெண்டு திரைப்படத்திற்கு பின்பு ஒரு புதிய படத்தில் மாதவன்- அனுஷ்கா இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: ரெண்டு திரைப்படத்திற்கு பின்பு ஒரு புதிய படத்தில் மாதவன்- அனுஷ்கா இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் மாதவனும் அனுஷ்காவும் இணைந்து ‘ரெண்டு’ படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வாய்ப்பு எதுவும் அமையவில்லை. 
 
இந்நிலையில் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் மாதவனும் அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இதில் அஞ்சலி, மைகேல் மேட்சென், சுப்பராஜு, ஷாலினி பாண்டே என ஏராளமானோர் நடிக்கின்றனர். 

மேலும் சமீபத்தில் அனுஷ்கா வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.